ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள ஐயம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 400 க்கும் மேற்பட்ட வீரர்களும் 600க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சின்னமனூரை சேர்ந்த முருகேசன் வந்துள்ளார். இவர் ஆவேசமாக காளைகளை அடக்கியபோது எதிர்பாராதவிதமாக ஒரு காளை அவருடைய மார்பு பகுதியிலும் தொடைப் பகுதியிலும் முட்டியுள்ளது.
அதனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனால் அருகிலிருந்தவர்கள் அவரை தூக்கி சென்று முதலுதவி செய்துள்ளனர். பின்னர் தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் போட்டியை காண வந்த காளீஸ்வரன் என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.