தாய் கண்டித்ததால் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பகுதியை சார்ந்தவர் வசந்த். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பஞ்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து நேற்று முன்தினம் காலை வீட்டின் சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வசந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.