Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாதகமாக அமைந்த கூட்ட நெரிசல்…. கோவிலில் பெண்கள் செய்த செயல்…. 4 பேர் கைது….!!

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகளை திருடிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திலுள்ள நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வயதான பெண்களை குறிவைத்து 18 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை ஒன்று அமைத்துள்ளது. இந்த தனிப்படை பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

இதற்கிடையே நகை திருட்டில் ஈடுபட்ட கோவை மாவட்டத்தைச் சார்ந்த திவ்யா, அமுதா, ஜெயந்தி மற்றும் திருச்சி சமயபுரத்தை சார்ந்த பிரியா ஆகிய நான்கு பெண்களையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இந்தப் பெண்களிடம் இருந்து சுமார் 15 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டிள்ளார்.

Categories

Tech |