விவசாயிகள் போராட்டத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும், கணக்குகளையும் ஏன் நீக்கவில்லை என்று ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் டுவிட்டரில் பரவி வந்தது. விவசாயிகளை அரசு படுகொலை செய்கின்றது என வதந்திகளை பரப்பி வந்தது. அரசின் மீது அவதூறான விமர்சனங்கள் வைக்கப்பட்டதாகவும் ,இதுபோன்று 250 பதிவுகள் இருந்தும் இப்படிப்பட்ட கணக்குகளை ட்விட்டர் நீக்கவில்லை என்று மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத் துறை அறிவித்திருந்தது.
இந்த அறிவுறுத்தல் பின்பற்றப்படாத நிலையில் தற்போது ட்விட்டருக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவதூறுகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது