பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் விட் செய்துள்ளனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும்,தமிழக முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனுசரிக்கப்படுகிறது. அவரின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ட்வீட் செய்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவீட்டில், தமிழ்மொழி,தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ் சமூகத்திற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. அவரை அவரது நினைவு தினத்தில் போற்றி வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன். #அறிஞர்அண்ணா pic.twitter.com/t14TvJN1VA
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 3, 2021
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவீட்டில், தமிழைச் வாசித்தவர், தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை தன் உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர். தமிழ்த் தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில் எனது நினைவு அஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழை சுவாசித்தவர்;
தமிழர்களை நேசித்தவர்;
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்;
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்!தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன். #அண்ணா pic.twitter.com/JZySjAWWG1
— O Panneerselvam (@OfficeOfOPS) February 3, 2021