Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பேனர் வைக்க முயற்சித்தவர்கள்… நண்பர்களுக்கு நடந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு…!!

பேனர் வைக்க முயன்ற போது உயர் மின்னழுத்தம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் பேனர் வைக்கும் தொழில் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் பேனர் வைக்க முயற்சி செய்தபோது, பேனரின் கம்பியானது அங்கு இருந்த உயர்மின் அழுத்த கம்பியின் மீது உரசி விட்டது. இதனால் நண்பர்கள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து விட்டது.

இதில் படுகாயம் அடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். மேலும் செந்தில்குமாருக்கு உடலில் படுகாயம் ஏற்பட்டு விட்டது. இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவனின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதோடு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் படுகாயமடைந்த செந்தில்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |