சேலம் மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண்ணை பெற்றோர் நைசாக பேசி அழைத்து சென்று கருவை கலைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கடந்த சில மாதங்களாக தாழ்ந்த ஜாதி மக்களை உயர்ந்த ஜாதியினர் இழிவுபடுத்தி கொடூரமான முறையில் தாக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதன்படி சேலம் தலைவாசல் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த வாணி என்ற இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களை விட தாழ்ந்த ஜாதியில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அதன்பிறகு ஜாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த வானிடம் நைசாக பேசி பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து வாணியின் கருவை ஜாதி வெறி பிடித்த பெற்றோர் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மிகக் கொடூரமாகக் கலைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோரை கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.