Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ரொம்ப நாள் அப்பறம் போனோம்… கொஞ்சமாகத் தான் இருக்கு… வருத்தத்தில் வாடிய மீனவர்கள்…!!

20 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்கும் சென்றாலும் குறைந்த அளவில் மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் தவிக்கும் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று 20 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 387 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி உள்ளனர். மேலும்  20 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் என்றாலும் மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டுள்ளது. அதோடு கடற்கரை பகுதியானது குறைவான மீன்கள் கிடைத்ததால் களை இழந்து காணப்பட்டுள்ளது.

Categories

Tech |