திருச்சியில் மழை வேண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் அதே வேலையில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது இதனை தொடர்ந்து தற்பொழுது திருச்சியில் இருக்கக்கூடிய உழவர் சந்தையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை ஆனது நடைபெற்றது இந்த சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை செய்தனர்