மழை வேண்டி அனைத்து மாவட்டத்திலும் கோவில்களில் யாகம் நடத்த முதல்வர் , துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்த அனைத்து மாவட்ட அதிமுக செயலாளருக்கு உத்தரவிட்டப் பட்டுள்ளது.அதில் முதல்வரும் துணை முதல்வரும் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.