மரக்கன்றுகளை நட்டால் 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதிதாக களமிறங்கியுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோயம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீவரு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த பைக் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிய படுகிறது. க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை ரூ.2.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்து மரக்கன்றுகளை வெவ்வேறு பகுதியில் நட்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினால் இந்த புதிய எலக்ட்ரிக் பைக் இருக்கு 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் எலக்ட்ரிக் பைக்கிற்கு 5,200 முதல் மாத தவணை திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 126கிமீ தூரம் வரையிலும், எலைட் வேரியண்ட்டின் பேட்டரி 225கிமீ தூரம் வரையிலும் பைக் இயங்கும்.