Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு… பிப்ரவரி 28 வரை மீண்டும் தடை… அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையானது சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் இந்திய சிவில் விமான போக்குவரத்து இயக்கத்தினால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு பொருந்தாது. கூடுதல் வழித்தடங்களில் அனுமதி பெற்று விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |