Categories
தேசிய செய்திகள்

“மணமகள் வீட்டாரை ஏமாற்ற”… ராணுவ உடை அணிந்து சுற்றிய இளைஞர்..? கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

மணமகள் வீட்டார் ஏமாற்றுவதற்காக ராணுவ உடை அணிந்து ராணுவ பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இண்டோரில் தலைமை ராணுவ முகாம் பகுதியில் குடியரசு தினத்தன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராணுவ வீரர் போல் உடை அணிந்து ராணுவ முகாமை சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரது நடை மற்றும் முறை வித்தியாசமாக இருந்ததை பார்த்த அங்கிருந்த ராணுவ படையினர் அவர் பற்றி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பீகாரை சேர்ந்த மிதுன் வர்மா என்பது தெரியவந்தது.

மிதுன் வர்மா என்ற நபர் பீகாரின் ராஜ்கர்ட் மாவட்டத்திலுள்ள பியோர பகுதியை சேர்ந்தவர். அவர் பிதாபூரில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இன்னும் சில நாட்களில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. மணமகள் வீட்டாரை கவர்வதற்காக தான் ஒரு ராணுவ வீரர் போல் உடையணிந்து இராணுவ முகாம் பகுதியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு வந்திருக்கிறார். ராணுவ உடையை தவறாக அணிந்திருந்ததால் ராணுவ அதிகாரிகள் அவரை கண்டுபிடித்து விட்டனர்.

இதையடுத்து அவரது போனை ஆய்வு செய்து பார்த்ததில் ராணுவ வீரரை போல் போலியாக ஐடி கார்டை தயாரித்து புகைப்படம் எடுத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏன் இவ்வாறு செய்தார்? திருமணத்திற்காக மணமகள் வீட்டார் ஏமாற்றுவதற்காக இதைச் செய்தாரா ?அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |