சுவிட்சர்லாந்தில் வகுப்பறையில் அமர்ந்து உணவருந்திய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள St.Gallen என்ற மண்டலத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 22 மாணவர்கள் வரும் வெள்ளிக்கிழமை வரை தனிமைப்படுத்தபட்டுள்ளார்கள்.
இதுகுறித்து மண்டல சுகாதார நிர்வாகிகள் கூறியதாவது, வகுப்பறையில் மாணவர்கள் முன்பு முகக்கவசம் நீக்குவது சரியானது அல்ல என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் சூரிச் மண்டலத்திலும் நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முதல் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் St.Gallen மண்டலத்தில் இரண்டு ஆசிரியர்களுக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர்களது வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் அந்த பள்ளியில் இருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது. இதற்கான முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை அன்று தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.