பிரேசிலில் 53 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள பரானா என்ற மாகாணத்தில் பேருந்து ஒன்று 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய பேருந்து அங்குள்ள மலைக் ஒன்றிலிருந்து கீழே சரிந்து விழுந்துள்ளது. மேலும் இந்த பேருந்து சரிந்த வேகத்தில் பெரும் விபத்துக்குளானது.
இதனால் அந்த பேருந்தில் இருந்த 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பின்பு விபத்தில் படுகாயம் அடைந்துள்ள பலரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்துள்ளனர்.