Categories
சென்னை மாநில செய்திகள்

72 ஆவது குடியரசு தின ஒத்திகைகள்… சென்னையில் முன்னேற்பாடுகள் தீவிரம்… இறுதி நாளில் முக்கிய கட்டுப்பாடுகள்…!!

சென்னை மெரினாவில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று நடக்கவிருக்கும் குடியரசு தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றுள்ளது. 

இந்தியாவில் தற்போது வரும் ஜனவரி 26ம் தேதி அன்று கொண்டாடவிருக்கும் குடியரசு தினமானது 72 வது குடியரசு தினமாகும். இதனை கொண்டாட சென்னை மெரினாவில் காமராஜர் சாலையில் இருக்கும் காந்தி சிலையின் அருகே மூன்றாம் நாளாக நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் போன்றோரின் வாகன ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து தேசியகீதம் இயற்றப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்திய தேசிய கொடியான மூவர்ண கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து முப்படைகளின் அணிவகுப்பு, தேசிய மாணவர் படை, மத்திய தொழிற்படை, தமிழ்நாடு காவல்துறை  மற்றும் தீயணைப்பு படை ஆகிய வீரர்களின் அணிவகுப்பு காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு போன்றவற்றிற்கான ஒத்திகைகளும் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த வருடம் கொரோனா தொற்றின் அச்சுறுத்தலால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அதேபோன்று நிகழ்ச்சிகளை காண்பதற்கு பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இறுதிநாளின் ஒத்திகையில் சென்னை காமராஜர் சாலையை இணைக்கும் சாலைகள் அனைத்திலும் பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |