கார் டிரைவர் நர்சிங் மாணவியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் 17 வயதுடைய நர்சிங் மாணவி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த அந்த மாணவியை சரவணன் கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் தாயார் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய குற்றத்திற்காக சரவணனை கைது செய்ததோடு, போலீசாரால் மீட்கப்பட்ட மாணவி கடலூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.