Categories
தேசிய செய்திகள்

சீரம் நிறுவனத்தில் தீ விபத்து…. 5 பேர் உயிரிழப்பு…!!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தடுப்பூசி தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் கட்டிடத்தில் தீ பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இரண்டாவது மாடியில வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |