Categories
தேசிய செய்திகள்

“சசிகலா சிகிச்சையில் சந்தேகம்”… மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா உடல் நலம் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாகவும் இவருக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர். வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக இருப்பதால் அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சி பொதுச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகலாவுக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் தகவல் அளிக்கவில்லை.

அது ஏன் என்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 12 மணி நேரம் ஆகியும் அவருக்கு சிடி ஸ்கேன் ஏன் எடுக்கப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது என அவர் குறிப்பிட்டார். மேலும் சசிகலாவிற்கு சிறையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும், கர்நாடக மனித உரிமை ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். இவரை உடனடியாக கேரளா அல்லது புதுவையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |