சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கிக்கொண்ட 22 தொழிலாளர்களில் 12 பேர் உயிருடன் இருப்பதாக மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் குவிக்சியா என்ற பகுதியில் தங்கச்சுரங்கம் ஒன்று உள்ளது. அங்கு கடந்த வாரம் தொழிலார்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது . இதில் சுரங்க பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 22 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதனால் 300க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலார்களில் 12 பேர் உயிருடன் இருப்பதாக மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் மற்ற 10 தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.