Categories
உலக செய்திகள்

சும்மா இருக்க மாட்டாங்க…! ஆயுதத்தோட வருவாங்க… அத்துமீறும் டிரம்ப் குரூப்… USAவுக்கு உச்சகட்ட அலர்ட் …!!

ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட இருப்பதாக ஃபெடரல் பீரோ ஆஃ இன்வெஸ்டிகேஷன் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இதனை அடுத்து ஜனவரி 20ஆம் தேதி ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவி ஏற்க உள்ளனர்.

முன்னதாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சான்றிதழ் வழங்க பட்ட போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் காவல் துறை அதிகாரி உட்பட 4 பேர்  உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து தற்போது ஃபெடரல் பீரோ ஆஃ இன்வெஸ்டிகேஷன் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் பதவியேற்பு விழாவின் போது சுமார் 50க்கும் மேற்பட்ட தலைநகரங்களில் ட்ரம்பின்ஆதரவாளர் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட திட்டமிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜனவரி 16 இல் இருந்து 20ஆம் தேதி வரை ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயுத கிளர்ச்சியில் ஈடுபடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு கேபிட்டல் கட்டடத்தில் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பதவியேற்பு விழா ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கேபிட்டல் கட்டிடம் அமைந்துள்ள வாஷிங்டன் டிசியில் பாதுகாப்பு படையினர் 20 ஆயிரம் வீரர்கள் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |