இமாச்சல பிரதேசத்தின் தீர்த்தன் பள்ளத்தாக்கில் சாலையின் ஓரத்தில் நிற்கும் மக்களுடன் சிறுத்தை ஒன்று விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த சிறுத்தையானது அங்கிருந்த மக்களைப் பார்த்து ஒருவிதமான குஷியில் ஓடிச் செல்கிறது. அதனைக் கண்டதும் அங்கிருக்கும் சிலர் பயந்து ஓடிச் செல்கின்றனர்.
ஒரு சிலரோ சிறுத்தை தாக்குவதற்காக வரவில்லை என்பதை உணர்ந்து அசையாமல் நின்று கொண்டிருந்தனர். அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தவர்களின் காலடியின் அருகே சென்று அவர்களை உரசியபடி பின் அவர்கள் மீது தொற்றி கொண்டு கைகளை பிடித்தபடி விளையாடி மகிழ்ந்தது அந்த சிறுத்தை. இந்த வீடியோவை பார்த்த வனத்துறை அதிகாரி ஒருவர், இது போல நடந்து கொள்வது சிறுத்தையின் குணாதிசயம் கிடையாது எனவும், இந்த சிறுத்தையை யாராவது வீட்டில் வைத்து வளர்த்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.