Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென விழுந்த சுவர்… இடிபாட்டில் சிக்கிய தாய், மகள்… நேர்ந்த துயர சம்பவம்….!!

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரக்குறிச்சி பகுதியில் வரப்பிரசாதம்-மேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிவேதா என்ற ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மேரி தனது மகள் நிவேதா உடன் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக அவரது வீட்டின் மண் சுவர் இடிந்து திடீரென வீட்டில் உட்புறமாக விழுந்துவிட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த சுவர்களை அகற்றி விட்டு இருவரையும் மீட்டனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கிய தாய் மகள் இருவரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் விரைந்து வந்து அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |