Categories
மாநில செய்திகள்

தமிழ் கலாச்சாரத்தை பாராட்டுவதற்காக…. ஜல்லிக்கட்டில் பங்கேற்றேன் – ராகுல் காந்தி…!!

தமிழ் கலாச்சாரத்தை பாராட்டுவதற்கு தான் தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி விமானத்தில் வந்து மதுரை வந்தடைந்துள்ளார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர் மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தபோது ராகுல்காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “தமிழ் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியது தன் கடமை. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் கலாச்சாரமும் பாரம்பரியமும் இந்தியாவிற்கு தேவையான ஒன்று. உங்களின் உணர்ச்சிகளையும், கலாச்சாரத்தையும் பாராட்டுவதற்கு தான் தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும் வீரர் ஒருவர் வெற்றி பெற்றதற்கு உதயநிதி ஸ்டாலின் ஒரு சவரன் மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார்.

Categories

Tech |