Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை முதல்வராக்கியது எம்எல்ஏக்கள் தான்…. சசிகலா இல்லை – முதல்வர் பேட்டி…!!

சசிகலா என்னை முதல்வராக்கவில்லை எம்எல்ஏக்கள் தான் என்னை முதல்வராக்கினார்கள் என்று எடப்பாடி பேட்டியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலையாக இருக்கிறார். எனவே சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுக அரசு எந்த மாதிரியான மாற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

முதல்வராக பதவி ஏற்பதாக அறிவித்து, சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா சிறை சென்றார். அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தினர். அச்சமயம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சசிகலா என்னை முதல்வராக ஆக்கவில்லை. கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருந்ததால் எம்எல்ஏக்கள் தான் என்னை முதல்வராக தேர்வு செய்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |