ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலின், அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை நிர்வாகம் முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இனிவரும் காலங்களில் கலவரத்தை ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதால் அவரின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய தாக்குதலை தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கு 12 மணி நேரத்திற்குள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் அதற்கான அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் ட்விட்டர் மற்றும் பிற சமூக வலைதள நிறுவனங்கள் டொனால்ட் ட்ரம்ப்பின் கணக்கை முடக்கியுள்ளது, பிரச்சினைக்குரியதாகும் என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல்லின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதாவது கருத்து சுதந்திரத்தை ஆன்லைன் தளங்களின் முதலாளிகள் தீர்மானிக்ககூடாது. கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை என்பது அடிப்படை முக்கியத்துவத்தின் அடிப்படை உரிமை ஆகும். எனவே சட்டத்தின் வாயிலாகவும் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ள கட்டமைப்பினால் மட்டுமே இதுபோன்ற அடிப்படை உரிமைகளில் தலையிட முடியும். மேலும் சமூக ஊடக தளங்களில் நிர்வாகத்தினால் தலையிட முடியாது என்று ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல்லின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.