நாடு முழுவதும் தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்தியாவில் காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வருகிறார்கள். அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234 b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அதற்கு மாதாந்திர வட்டி வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே வருமான வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு இந்த அபராத வட்டி தொகை பொருந்தும்.
இந்நிலையில் 2019-2020 நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அதாவது வருமான வரி சட்டத்தின் படி அறுபது வயதுக்கு குறைந்த தனிநபர்களின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம். மேலும் இன்று தவற விடும் பட்சத்தில் தாமதமாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.