பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியை சார்ந்தவர் கனகசபை. இவர் தன் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் கனகசபை முதலீடு செய்த தொகை நஷ்டம் ஆனது. இச்சம்பவத்தினால் மனமுடைந்த கனகசபை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கனகசபையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.