Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரையாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால்… மனமுடைந்து… சிறுவன் செய்த செயல்…!!

கோவையில் பள்ளி  மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவருடைய  மகன் பவுல் ரோஷன்(15). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் மூலம் ரோஷன் பாடம் படித்து வந்தார். இந்நிலையில்  நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அவர் எதிர்பார்த்ததை விட குறைவான  மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாகவே ரோஷன் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று அவர்  மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்குவதற்காக சென்றுள்ளார். அங்கு சென்ற ரோஷன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் ரோஷன் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது தங்களது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர்  இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோஷனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |