தாயுடன் பேசியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விசுவாசபுரம் பாத்திமா நகரில் இக்னியஸ்சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி முத்துலட்சுமியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுடைய மகன் சேவியர் பிரகாஷ் அஜய் என்பவர் தனது தந்தையுடன் இருக்கிறார். அஜய் சென்னையில் உள்ள ஒரு தொழில் பயிற்சி பள்ளியில் ஐ.டி.ஐ முதலாவது ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்குசமயத்தில் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், அப்பகுதியில் அஜய் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இதனையடுத்து அஜய் தனது தாயிடம் சமீபகாலமாக தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை பற்றி தெரிந்து கொண்ட இக்னியஸ்சுந்தர் அஜயை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அஜய் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.