Categories
லைப் ஸ்டைல்

இயர்போன் பிரியரா நீங்கள்….? அதிகமா பயன்படுத்தாதீர்கள்… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

இயர்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வீட்டில் இருப்பவர்கள் அதிக அளவில் போன்களை பயன்படுத்தி உள்ளனர். மேலும் ஆன்லைன் மூலம் பணியாற்றுபவர்கள், ஆன்லைன் கல்வி கற்பவர்கள் என பலர் இயர்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த எட்டு மாதங்களில் காதுகளில் பாதிப்பு ஏற்படுவதை அதிகரித்து உள்ளதாக நிபுணர் கூறியுள்ளனர்.

இது குறித்து ஜே.ஜே அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: “அதிக சத்தத்துடன் நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் காதுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் 5 முதல் 10 பேர் தினம்தோறும் காதுகளில் பிரச்சனை ஏற்படுகிறது என்று வருகின்றனர். பெரும்பாலானோர் 8 மணிநேரங்களுக்கு மேல் இயர்போன் அணிந்தபடியே பணியாற்றுவதால் காதுகளில் அதிக அழுத்தம் கொடுக்கிறது. சுத்தமில்லாத இயர் போனைப் பயன்படுத்தும்போது காதில் நோய் தொற்று ஏற்படும். அதிக அளவு சத்தத்தை கொண்டு இயர்போனை பயன்படுத்தும் போது கேட்கும் திறன் குறையும். இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ளதவர்களுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

காதுகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கு நிபுணர்கள் கூறும் விளக்கம்:

தொடர்ந்து அதிக நேரம் இயர் போன் பயன்படுத்துவதால் இடைவெளிவிட்டு இயர் போன்களை பயன்படுத்த வேண்டும். கணினி மற்றும் மடிக்கணினிகளில் உள்ள ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம். பள்ளி மாணவர்கள் 60 டெசிபல் சத்தத்தை மேல் ஏற்போன் பயன்படுத்தினால் அது அவர்களின் காதுகளில் நேரடியாக பாதிக்கும். இதுபோல் சுத்தமில்லாத இடங்களில் இயர் போன்களை உள்ளிட்ட சாதனங்களை வைக்கக் கூடாது. இயர் போன் பதிலாக ஹெட்போன்களை பயன்படுத்தலாம்.

Categories

Tech |