ரஜினியை அரசியலில் ஈடுபட சொல்லி போராட்டம் நடத்த வேண்டாம் என்று ரஜினி ரசிகர் மன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினியை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்துவது, போராட்டங்களில் ஈடுபட போவதாக சில ரசிகர்கள் பேசிவருகிறார்கள்.
இது போன்ற செயல் அவரை மேலும் நோகடிக்க செய்யும் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்காக ஒரு சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளன. நம் தலைவரின் மீது அன்பும், அக்கறையும் கொண்ட ரஜினி மக்கள் மன்ற காவலர்களும், ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.