திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது .
கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது . இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப் பட்டது . தற்போது வருகிற பொங்கல் தினத்தில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . கடந்த வாரம் நடிகர் விஜய் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் இதுகுறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . இந்த அறிவிப்பால் திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் . அதைப்போல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் உற்சாகத்தில் உள்ளனர்.