திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் வீடு மற்றும் நிலங்களை அபகரித்து விடுவார்கள் என்று பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் திரு.முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை பிராட்வேயில் பாரதிய ஜனதா சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு திமுக காங்கிரஸ் பற்றிய ஊழல் உலகத்திற்கு நன்றாக தெரியும் என்றும், ஊழல் குறித்து பேச இவ் விரு கட்சிகளுக்கும் என்ன தகுதி உள்ளது ? என்றும் கேள்வி எழுப்பினார். திமுக விற்கு வாக்களித்து வாக்க்குகளை வீண் அடிக்க வேண்டாம் என்றும் அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல். முருகன், திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யை மட்டுமே பேசி வருவதாகவும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வீட்டையும் நிலத்தையும் ஆக்கிரமித்து விடுவார்கள் என்றும் எச்சரித்தார்.