Categories
கரூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்திய மகள்… மறுப்பு தெரிவித்த தாய்… மகள் எடுத்த முடிவு…!!

குடும்பத் தகராறில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமணம்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணி- லிங்கம்மாள். இத்தம்பதியருக்கு  அருள்ஜோதி என்ற மகள்  உள்ளார். இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சுப்பிரமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் அருள்ஜோதி தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞரை அருள்ஜோதி காதலித்துள்ளார். இதனால் தனது தாயாரிடம் உடனடியாக காதலனுடன் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு லிங்கம்மாள் திருமணம் இப்போது வேண்டாம் சிறிது நாட்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு நடந்ததிலிருந்து அருள்ஜோதி மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் லிங்கம்மாள் வழக்கம்போல்  வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து லிங்கம்மாள் பலமுறை அருள்ஜோதியை அழைத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு அருள்ஜோதி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் . இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருள்ஜோதியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |