Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை… பெற்றோரை இழந்த மாணவி எடுத்த விபரீத முடிவு…!!

பெற்றோரை இழந்த மாணவி  தூக்கு போட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் அனுஷ்யா(19). இவர்  அப்பகுதியில்  உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அனுஷ்யாவின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுஷியாவின் தந்தை மாரிமுத்துவும்  இறந்துள்ளார்.  இதனால் அனுஷ்யா மிகவும் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடிய போது நம்மால் மகிழ்ச்சியால் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அனுசியா இருந்துள்ளார்.

இதனால் வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அனுஷ்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக  தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |