உடல் நலம் சரியில்லாத ரஜினிகாந்த் தற்போது மன சோர்வு அடைந்துள்ளார்.அவரது குடும்பத்தினர் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் அவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டது. அதன்பின் உடல் நலம் சீராகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இருப்பினும் அவருக்கு மனச்சோர்வு பிரச்சனை இருந்து வந்தது. எனவே தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார். ரஜினியின் இந்த அரசியல் முடிவுக்கு அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.சமூக வலைத்தளங்களிலும் அவரது ரசிகர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் ரஜினி மிகவும் மன சோர்வு அடைந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே உடல் நிலையில் பாதிப்பு உள்ளதால் இந்த மன சோர்வும் அவரை சேர்த்து வாடி விடும் என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தினர் அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டு அங்கேயே சில நாட்களுக்கு தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அவர் சென்னையில் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் இருந்தால் அவரது மனநிலை சீராகும் என்று கூறுகின்றனர். நிறுத்திவைக்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பை கருத்திற்கொண்டு அவர் பிப்ரவரி மாதம் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வந்துவிடுவார் என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.