விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சிகளின் சதி என கூறுவது முற்றிலும் தவறு என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடுங்குளிரில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து மத்திய அரசு வேளாண் சடங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் சதி என்று கூறுவது முற்றிலும் தவறானது என்றும், இது போன்ற சொற்களை பயன்படுத்துவது பாவச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற தவறான அணுகுமுறைக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று திருமதி பிரியங்கா காந்தி தெரிவித்தார்.