Categories
மாநில செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவு… முதல்வர் ஆழ்ந்த இரங்கல்…!!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் சற்று முன் காலமானார். இரண்டு ஆஸ்கார் விருதுகள் மற்றும் பல விருதுகளுக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அவர் உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தனது இசையை மூலமாக புகழ்பெற்றவர். அவரின் தாயார் உடல்நிலை குறைவால் இன்று திடீரென மரணம் அடைந்தார்.எனது இசை பயணத்தையும், வாழ்க்கையையும் வடிவமைத்ததில் என் அம்மாவின் பங்கு அதிகம் என எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் அவருக்கு தாயார் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.

மேலும் அவரது தாயார் மறைவிற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தாயார் உடல் நலக்குறைவால் காலமான செய்தியை அறிந்ததும் மன வேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயரத்தில் இருக்கும் அவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |