ரஜினியை நேரில் சந்திக்க வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதற்கான காரணம் வெளியாகவில்லை.
கொரோனா பரவல் குறைந்த நிலையில் ரஜினி நடித்த “அண்ணாத்த” படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கும் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதால், மருத்துவமனையில் அவரது உடல் நலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
மேலும் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் ஏறி இறங்கி வருவதாகவும், அதற்கான பரிசோதனை தொடர்ந்து மருத்துவமனையிலேயே தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினியின் உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவருடைய ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் சரியாக இருக்க மருந்துகள் சரியாக கொடுக்கப்படுகின்றன.
அவர் இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார். நாளை அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கபடும். அவர் நலமாக இருக்கிறார். தற்போது ஓய்வில் இருப்பதால் அவரைப் பார்க்க அனுமதி கிடையாது. எனவே யாரும் அவரை பார்க்க வரவேண்டாம் என ரஜினியின் குடும்பத்தினரும், சிகிச்சை செய்யும் மருத்துவர்களும் கேட்டுள்ளனர். மேலும் அவருடைய மகள் அவரோடு தான் இருக்கிறார்” என்று விளக்கம் அளித்துள்ளது.