கர்நாடக மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சம் அடைந்துள்ளனர்.
அதனால் கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நேற்று முன்தினம் நம் மாநில முதல்வர் அறிவித்திருந்தார். அது ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தொடரும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அவ்வாறு அமல்படுத்தப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் அனைத்தும் நேற்று நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் பரிந்துரையை ஏற்று இரவு நேர ஊரடங்கு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.