மக்கள் வரி பணத்தை லஞ்சமாக கொடுத்து தனக்கு வாக்களிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு அறிவித்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டாப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் அறிவிக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக பொங்கல் பரிசு அறிவித்திருப்பதாக கடுமையாக விமர்சித்தார். பொங்கல் பரிசாக 2500 என்று அறிவித்திருப்பது யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்கிற பழமொழிக்கு ஏற்ப தேர்தலை ஒட்டி வழங்கப்பட்டிருக்கிற …
பொதுமக்களுக்கு அரசாங்க பணத்தை எடுத்து….. மக்களுடைய வரி பண்ணதை எடுத்து லஞ்சம் கொடுத்து வாக்குகளாக எனக்கு அளியுங்கள் என்கிற அறிவிப்பாக இருக்கிறது. ஆக பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அந்த பாதிப்பில் இருந்து மீட்பதற்கு பொருளாதர நீதியாக உதவி செய்ய முன்வராமல், பாதுகாக்க முற்படாமல் அரசு பணத்தை இப்படி தவறாக பயன்படுத்தி அதின் முலமாக அரசியல் ஆதாயம் பெறலாம் என்கிற இந்த முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.