இயக்குனர் சுந்தர்.சி அடுத்ததாக தயாரித்து நடிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகில் கமர்ஷியல் படங்களை கொடுக்கும் பிரபல இயக்குனர் சுந்தர்.சி தற்போது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தயாரிப்பில், ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது . சமீபத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் வெளியான ‘நாங்க ரொம்ப பிஸி’ திரைப்படம் தீபாவளிக்கு நேரடியாக டிவியில் ஒளிபரப்பப்பட்டது . இந்த படத்தை சுந்தர்.சி யின் உதவி இயக்குனர் பத்ரி இயக்கியிருந்தார் .
இந்நிலையில் சுந்தர்.சி அடுத்ததாக தயாரிக்கும் படத்தையும் இயக்குனர் பத்ரி இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்க ,நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு தான் பவர்ஃபுல்லான ரோல் என்பதால் இதில் நடிக்க நடிகர் ஜெய் சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.