‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டதற்கு ட்விட்டரில் நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் .
Happy to release the 1st single from @trishtrashers ‘s #Raangi #Paniththuli – https://t.co/FWrGMiRWZs
Lovely melody from @CSathyaOfficial in @Chinmayi voice & @KaviKabilan2 Lyrics😊
Best wishes to @LycaProductions #Trisha Dir @Saravanan16713 & entire team for a huge success👍— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 15, 2020
இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘பனித்துளி’ என்ற முதல் பாடலை நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது படத்தின் பாடலை வெளியிட உதவிய சிவகார்த்திகேயனுக்கு நடிகை திரிஷா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் .