Categories
சினிமா தமிழ் சினிமா

‘பனித்துளி விழுவதால் அணையாது தீபம்’… திரிஷாவின் ‘ராங்கி’ பட முதல் சிங்கிள் ரிலீஸ்…!!

நடிகை திரிஷாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் ‌. இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் உஸ்பெகிஸ்தான் பகுதியில் படமாக்கப்பட்டது.

Trisha Tamil Actress Latest News, Photos, Videos & Interviews | Galatta

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த  படப்பிடிப்பு கடும் குளிரையும்  பொருட்படுத்தாது வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘பனித்துளி விழுவதால் அணையாது தீபம்’ என்ற  பாடல் வெளியாகியுள்ளது . கபிலன் எழுதியுள்ள இந்தப் பாடல் வரிகளை சின்மயி, சத்யா, யாசின் நிசார் பாடியுள்ளனர் . இதையடுத்து நடிகை திரிஷா ஐந்து மொழிகளில் தயாராகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Categories

Tech |