சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஆழமான பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏரிகளில் மூழ்கி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் உயிர் இழப்பது தினசரி நிகழ்வாகிவிட்டது. அவ்வாறு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தவிர்த்து வருவது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை புழல் ஏரியில் மூன்று இளைஞர்கள் ஏரியில் மூழ்கி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏரி அருகே உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த அவர்கள், ஏரியில் குடிப்பதற்காக இறங்கியபோது ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டதால், நீரிலிருந்து வெளியே வரமுடியாமல் பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து இது மாதிரியான விபத்துகள் நடப்பதால், அரசு இதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.