பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புகளை எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்:
சருமம் வறண்டு இருக்கும் நிலையில், பாத வெடிப்புகள் ஏற்படும். அதிலும் முக்கியமாக, குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போவதுண்டு. ஆகையால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. அதனை நாம் ‘பித்த வெடிப்பு’ என்கிறோம்.

இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அதில் கால்களை 10 நிமிடங்கள் வைத்து எடுத்தப்பின், அதில் ஷாம்பு கலந்தும் உபயோகிக்கவும். இப்படி செய்துவதால், பாதங்கள் மற்றும் விரலிடுக்குகலில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றி, பாதங்கள் மென்மையாக உதவும்.
முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் கிரீம் இருப்பது போல, கடினமாக தோல்களை கொண்ட பாதத்திற்கு சில கிரீம்கள் கடைகளில் இருக்கும். அதனை வாங்கி தினமும் உங்களது கால்களில் தடவிக் கொள்வதால, உங்கள் கால்கள் மிருதுவாக மற்றும் ஈர்ப்பத்துடன் காணப்படும். மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தும் போது, உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். ஆகவே குளித்தவுடன் ஈரப்பதம் இருக்கும் நிலையிலேயே, மாய்ச்சரைசரை தடவ வேண்டும். அப்போழுது தான், அது தோலின் ஆழம் வரை சென்று நல்ல பலனைக் கொடுக்கும்.
தேங்காய் எண்ணெய், நெய், பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என அனைத்தையும் வைத்து மசாஜ் செய்யலாம். இதனை செய்து வருவதால் உங்களின் கால்கள் ஈரப்பதத்துடனும், ரத்தஓட்டம் சீராகவும் இருக்கஉதவும்.
வெடிப்புகள் நீங்க, மாதம் இரண்டு அல்லது மூன்று முறை படிக்கல்லால் (Pumice stone) பாதங்களின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து வந்தால், ரத்த ஓட்டம் சீராகி, வெடிப்புகளும் நீங்கும். மசாஜ் செய்தப்பின் வெதுவெதுப்பான நீரால் பாதங்களை கழுவவும்.
வாசலின், பெட்ரோலியம் ஜெல்லி போன்றவற்றை, தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் தடவி வருவதால், பித்த வெடிப்பு பிரச்னையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.
தினமும் பாதத்தில், மாய்ச்சரைசிங் க்ரீம் தடவி வருவதால் சருமத்தின் ஈரப்பதம் காக்கப்பட்டு வெடிப்புகள் உண்டாகாமல் இருக்கும்.