நம் மாநில மரமான பனையில் இருந்து கிடைக்கும் அத்தனை பொருட்களும் பயனுள்ளவை. அதில் ஒன்று தான் தவுண்.
பனங்காய்கள் முற்றி மரத்தில் பழுக்கும்போது பனம்பழம் ஆகிறது. பனம் பழத்தின் கோட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப் பொருள் தான் தவுண். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. கிராமங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் இதனை சேகரித்து உண்பார்கள்.
இவை வயிற்று புண்ணுக்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. மருத்துவ குணமிக்க தவுண் குளிர்ச்சி தர கூடியது. உடல் சூட்டை தணிக்கும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும். சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே தவுண் உண்ணக் கிடைக்கும்.