தமிழக அரசியலில் ரஜினி வருவதால் ஒரு புதுமையும் நடக்கப்போவதில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு கலகலப்பாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் கடந்த வாரம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி தொடங்குவதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “ரஜினி கட்சி தொடங்கினால் அதிமுக அமைச்சர்கள் உட்பட யாரும் செல்ல மாட்டார்கள். ரஜினி வருகையால் தமிழக அரசியலில் ஒரு புதுமையும் நடக்கப்போவதில்லை” என்று சிரித்துக்கொண்டே கலகலப்பாக பதிலளித்துள்ளார்.