அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முதல்வர் பழனிசாமி எடுத்த நடவடிக்கைக்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது சாட்டப்பட்டுள்ள சுற்றத்தை விசாரணை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி குழு ஒன்று நியமனம் செய்துள்ளார். அந்த குழு மூலம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதுள்ள புகார் குறித்து விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு ஆளுநர் பன்வாரிலால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதுபற்றி அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தனக்கு தெரியாமல் சூரப்பாவை விசாரிக்க அரசு குழு அமைத்தது நியாயமற்றது. அது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் ஆளுநர் கலையரசன் தலைமையிலான குழு விசாரணையை உடனே நிறுத்தி வைக்க வேண்டும்” என்று அவர் கட்டளையிட்டுள்ளார். இதனையடுத்து தமிழக அரசின் முடிவில் ஆளுநர் தலையிட்டதால் முதல்வர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.